கண்கள் காண்பதெல்லாம்...
இதயம் உள் எடுப்பதில்லை...
இருந்தும்...
நீ என் இதயம் சென்றவள்...!
என்னையே அறியாமல்
என் மனதில் குடிகொன்டுவிட்டாயடி...!
கண்ணுக்குள் கண்ணாய் உள்ளம் புகுந்தாய்...
உள்ளத்தை கீறிக்கிழித்து விளையாடுகிறாய்...
உறவாக வந்தாய்...
உறையாடிவிட்டு மட்டும் செல்லாமல்...
உயிருள்ளவரை உன்னை தேடுகிறது என் மனம்...!
கண்கள் இமைக்க மறுப்பதில்லை... - அது போல்
என் நினைவுகள் உன்னை விட்டு விலகுவதுமில்லை...
உன் பேச்சு என்னிடம் நின்றிடும் வேளையில்...
என் மூச்சும் நின்று போக
என் உயிரிடம் வேண்டுகோள் விடுகின்றேன்...!
மனதில் திடம் கொண்டவள் நீ...
என் உறவை விபரிக்க வார்தைகள் இல்லை என்னிடம்...!
காலம் முழுவதும் நீ என்னுள் வேண்டும்...!
Saturday, November 8, 2008
இதயத்தின் உலறல்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment