தூக்கம் இன்றி நான் தவித்த போது...
உன்னுடன் கூவிக் குலாவிய நேரங்கள்
எனை கொன்று குவிக்குதடி இரவிரவாய்...
நாற்பட்ட நோயை குணமாக்க
நாளாந்தம் உன் நினைவுகளையே
அருந்துகிறேன் பினி தீர்க்கும் மருந்தாய்...
வந்ததோ சில காலம்
வாடுகின்றேனடி ஏதோ பல காலம் போல்...
கண்டவுடன் கட்டியனைத்தவளே
உன்னை கண்டவுடன் என் கண்கள் மூடிக்கிடந்தேன்...
வெட்கம் என்ற ஒன்று ஆணுக்கும் உண்டு என
உன்னைப் பார்த்து தான் நான் அறிந்து கொன்டேன்..
ஆயிரம் ஆயிரம் கதை பேசியிருப்போம் அன்று
கதை பேசிய உதடுகளின் பாஷை
நேரில் நான் கண்டறிந்தேன் இன்று...
முத்தம் என்ற சொல்லை
நம் உதடுகள் கண்டபின்பு தான்
நான் உணர்ந்தேன்
வாய் மட்டுமல்ல
உன் உதடுகளும் உரையாடும் என...
இருந்தாலும் நீ கள்ளி..
பெண்னாக இருந்து பட படவென பழகிவிட்டாய்...
ஆணாக நான் உன்னிடம் அடங்கிப் போனேனடி
அன்பை உன்னை விட அதிகமாய்
உன்னிடம் காட்ட முடியாமல்...!
விட்டாயா...?
குழந்தை போல் என் மடியில் வீழ்ந்தாயே..
அச்சச்சோ...
ஒரு கனம் என்ன செய்வதென்று அறியாது
என் மனம் படபடத்தது உன்மை தான்...
இருந்தும் உன்னை எனக்கு மட்டுமே
சொந்தம் கொண்டாடியது என் உள்ளம்.
கட்டியணைத்துவிட்டேன் கண்ணியே உன்னை..
கைகள் அங்கும் இங்கும் பட்டதாக
சொல்லிச் சிரிப்பாய்...
ம்..ம்.. நானும் புன்னகைக்கின்றேன் அளவின்றி..
கோடி சுகம் கொடுத்தவளே
என்னவளே...
உறக்கம் வருகிறதடி...
இன்னொரு நாள்
வேறொரு சிந்தனையில் சந்திக்கின்றேன்....!
Saturday, April 19, 2008
ஒரு நாள் இரவில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment