Friday, March 28, 2008

என்னவளே...

பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!

Monday, March 24, 2008

உன் மூச்சின் வாசனையில்...

உனது விழியிலே
என் கனவு வரைகிறேன்..
எனது கவிதையில்
உன் அழகை பறிக்கிறேன்..
புரியாத கவிதை நீ பூப்பூத்தாய்...
நெஞ்சில் இனந்தெரியாதொரு
வலி கொடுத்தாய்...
சுகமாய் ஸ்வாசிக்கின்றேனடி
உன் மூச்சின் வாசனையில்...!

Monday, March 17, 2008

காத்திருப்பேன்...!

காலங்கள் கரைந்தாலும்...
நேரங்கள் நொருங்கினாலும்...
நாட்கள் விரைவாய் நகர்ந்தாலும்...
நமது நினைவுகளுடன் காத்திருப்பேன்...
என்றும் உனக்காக... !
கண்கள் நிறைய கண்ணீருடன்...
இதயம் நிறைந்த அன்புடன்...
காத்திருப்பேன்...!

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

உன் முக மலர்ச்சியில் ஆயிரம்
கவிதையை எழுதிட்ட நான்...
உன் அர்த்தமற்ற கோவத்தில்
அர்த்தமற்றுப் போகின்றேன் நான்...

Thursday, March 13, 2008

ஒரு நாள் இரவில் என் நினைவில்...

கவிதை எழுத யோசித்தேன்
கவிதை எழுதுவதை விட
உன்னையே கவிதையாய் எழுத
அந்த கவிதையே என்னிடம் கெஞ்சியது
நான் கூறினேன்...
அவள் எனக்கு மட்டுமே கவிதை
அவளை நான் மட்டுமே
படிக்க வேண்டும் என்று...
அப்போது கவிதை ஒன்றே ஒன்று கூறியது...
"உன்னவளை எனக்குக்கூட விட்டுத்தர
மனமில்லையா" என...
ம்..ம்.. நான் புன்னகைத்தேன்...

கண் கானாத இடத்தில் நீ இருந்தாலும்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான்
நம் காதல் உள்ளது பெண்னே...
கண்னை மூடிக்கொள்...
கனவுக்குள் நான் வருவேன்...
ஆ...ஹா...என்ன ஒரு சுகம்?
தூக்கத்தை விட்டு கனவில் மிதப்பதென்றால்..

என் முச்சை இந்த காற்றுடன் கலந்து
அனுப்புகிறேன்...
உன்னை நலம் விசாரிக்க வருகிறது
உன்னைத் தேடியே....
பதில் கூறி திருப்பி அனுப்பி விடாமல்
உன் முச்சோடு ஒன்று சேர்த்திடு பெண்னே...

உருவமாய் நீ அங்கே இருக்கிறாய்...
உன் உயிரை
என்னிடம் அல்லவா விட்டுச்சென்றாய்...
உயிர் இன்றி உருவத்திற்கு ஏதடி அழகு...?
நீ உன் உயிரோடு சேரும் நாளே அழகு...!

காதலிக்கும் முன்பே கவிதை எழுதினேன்...
உன்னை காதலித்த பின்பே
அந்த கவிதையை விடவும்
ஒரு அழகி இருக்கிறாள் என
உன்னையே எழுத ஆரம்பித்துவிட்டேன்...!

யார் உன் பெயர் சொல்லி அழைத்தாலும்...
முதலில் திரும்புவது என் முகம் தான்...
உன் பெயரைக்கூட யாரும் உச்சரிக்க
என் கர்வம் விடவில்லை...
உன்னைப் போல்
உன் பெயரையும் காதலிக்கிறேன்...
ம்...ம்... சிரிக்கின்றாயா...???

அடிக்கடி கவிதைகள் எழுதுவதால்...
அவை உன்னை என் பக்கம்
திசை திருப்ப அல்ல பெண்னே...
உனக்கென படைக்கப்பட்ட கவிதைகள்
உனக்கே சொந்தமானவை...
அவை உன்னிடமே சேரவேண்டும்
என்பதால் தானடி...

இவை எல்லாம் ஒரு நாள் இரவில்
உன்னவன் நினைவில் கலந்தவைகள்.......
நினைவுகள் தொடரும்....

Tuesday, March 11, 2008

என் விடியல் நீ இரவும் நீ...!

ஒவ்வொரு நாளும் விடியலாம்..
அதில் உன்னுடன் இருக்கும் நேரம் என்று வரும்
என்பது தான் என்னுடைய விடியல்...!
ஒவ்வொரு நாளும்
இரவுகள் இல்லாமல் இல்லை...
அதில் உன் கனவுகள்
என்னை தழுவும் நேரம்
என்னுடைய இரவுகளாக மலருமடி...!

Monday, March 10, 2008

என் ஆசை...

உயிரற்ற எல்லாம்
உன் ஒரு சிறு புன்னகையால்
உயிர்த்தெழுந்தது பெண்னே...
எங்கே உன் வெக்கம்???
எனக்குள் புதைக்கப்பட்டதுவோ...?
காற்றில்லா நேரத்திலும் கூட
உன் முத்தத்தையே காற்றாய்
ஸ்வாசித்திடுவேன் பெண்னே...
உயிர் பிரியும் நேரம் கூட
உன் கருவறையே என் கல்லறையாய்
மலரவேண்டும் பெண்னே...!

Saturday, March 8, 2008

உன்னோடு கனவில்...

உன் இமைகள் எனும் பாய்விரி...
என் கனவுகள் அங்கே உறங்கட்டும்...
உன் பார்வை கொண்டு போர்த்திடு...
ஓரிரு வார்த்தைகளால் நீ எனை தொடு...
என் ஆசைக் கனவுகள் அசையட்டும்...
எதையும் மறந்து காதலி...
உன் இதயம் திறந்து பாரடி...

Thursday, March 6, 2008

விழியிலே...

உன் விழியில் கரைந்தேன்..
கனவில் விழித்தேன்...
உன்னை துரத்தி துரத்தி பிடித்தேன்...
நெஞ்ஜில் விரும்பி இடத்தைப் பிடித்தேன்...
சொல்லாயோ..வான் மழையே...
உயிர் தாங்காது நீ இல்லையேல்...

வாடுகிறேன்...

பார்க்க பார்க்க தோனுதே...
காதல் கொண்ட ஆசையில்...
காணவில்லை உன் முகம்...
தூக்கமில்லை நித்தமும்...
கவிதை சொல்ல தோனுதே...
உந்தன் கண்கள் பார்க்கையில்...
இருந்தோம் இமையாய் ஒன்றாக...
பிரிந்தோம் கண்ணீர்த்துளியாக...

Tuesday, March 4, 2008

வினோதமானவளே...

வாழ்க்கை இனிக்கிறதே...
வாரம் ஏழு நாளும் உன்னைப்பற்றியே
நினைப்பதால்...
வயசும் கரைகிறதே...
நீ அருகில் இல்லை என்பதால்...
நாட்கள் இதோ செல்கின்றன
அதோ செல்கின்றன...
உன்னுடனான நாட்கள் என்று காண்பேன்..?
ஆயிரம் முறை துடித்தாலும்...
ஒரு முறையேனும் உன்னை
காணமுடியாமல்..
தவிக்குதடி மனசு...
நிழலாய் என் கண்களில் உன்னை

கண்டுகொன்டுதான் இருக்கிறேன்..
நிஜமாய் நீ என்னை விட்டு கண் கானா
இடத்தில் அல்லவா இருக்கிறாய்...
அழகான காதல் அதை நீதான் கொடுத்தாய்...
கூடாவே கவலைகளையும் அல்லவா கொடுத்தாய்...

Saturday, March 1, 2008

காத்திருப்பேன் காதலியே!

காத்திருந்தேன் காதலியே!
காணவில்லை உன் முகத்தை..
காண்பேன் என இருந்தேன்!
கண்டேன் ஒரு தினத்தில்..
கதைத்தேன் நொடிப்பொழுது!
களைந்தாய் மறுகனத்தில்..
கரைந்தேன் சிறு விழியில்...
காத்திருப்பேன் காதலியே உனக்காக..!

என்னவளே...

கண்களால் பேசி
என் மனதை
உனக்கென சொந்தமாக்கி
என் தூக்கத்தை பறித்து
எனக்குள் ஆயிரம் கனவுகளை
தோன்றச்செய்து
என்னையே எனக்கு
மறக்க வைத்தவளே...

உன்னாலே

பூக்களில் தேடிப்பார்த்தேன்...
வாசனைகள் இல்லையே...
வாசனைகள் அத்தனையும்
உன்னிடத்தில் சேர்ந்ததோ...
இசை கேட்டேன் உன்னாலே...
திசை பார்த்தேன் தன்னாலே...
மொழி அறிந்தேன் உன்னாலே...
கவி வடித்தேன் தன்னாலே...

உனக்காக...

என் தூக்கம் விற்கப்பட்டது
உன் கனவுகளுக்காக...
என் கவலைகள் மறக்கப்பட்டன
உன் புன்னகையால்...
உன் நினைவுகளால் மெளனமானது
என் வாய் மட்டுமல்ல என் இதயமும் தான்...
என் உள்ளத்தில் ஊஞ்சலாடும்
உத்தமியே நலமா...?
ஆக்கியதோ பல கவிகள் - வஞ்சியே
உனை எண்ணி...
நீ எனக்கென வடித்ததெல்லாம்
உன் புன்னகை ஒன்றுதான்...
ஆயிரம் கவிதைகள் கிறுக்கிட்டாலும்...
உன் சிறு புன்னகைக்கு ஈடாகாதடி...

அழகிலிருந்தால் அழகாய் இருப்பாய்...

பூக்களே அவள் கூந்தலில் வசித்துப்பார்
நீ அழகாய் இருப்பாய்...
வர்ணங்களே அவள் உடையில் ஒட்டிக்கொள்..
நீயும் அழகாய் இருப்பாய்...
வைரமே அவள் மூக்குத்தியில் ஒட்டிக்கொள்..
உன் மதிப்பு உனக்கே தெரியும்...
விடியலே அவள் முகம் காண விடியுங்கள்...
நிலவுக்கே வேலையில்லாமல் போய்விடுமோ...