Saturday, March 1, 2008

உனக்காக...

என் தூக்கம் விற்கப்பட்டது
உன் கனவுகளுக்காக...
என் கவலைகள் மறக்கப்பட்டன
உன் புன்னகையால்...
உன் நினைவுகளால் மெளனமானது
என் வாய் மட்டுமல்ல என் இதயமும் தான்...
என் உள்ளத்தில் ஊஞ்சலாடும்
உத்தமியே நலமா...?
ஆக்கியதோ பல கவிகள் - வஞ்சியே
உனை எண்ணி...
நீ எனக்கென வடித்ததெல்லாம்
உன் புன்னகை ஒன்றுதான்...
ஆயிரம் கவிதைகள் கிறுக்கிட்டாலும்...
உன் சிறு புன்னகைக்கு ஈடாகாதடி...

No comments: