Thursday, March 13, 2008

ஒரு நாள் இரவில் என் நினைவில்...

கவிதை எழுத யோசித்தேன்
கவிதை எழுதுவதை விட
உன்னையே கவிதையாய் எழுத
அந்த கவிதையே என்னிடம் கெஞ்சியது
நான் கூறினேன்...
அவள் எனக்கு மட்டுமே கவிதை
அவளை நான் மட்டுமே
படிக்க வேண்டும் என்று...
அப்போது கவிதை ஒன்றே ஒன்று கூறியது...
"உன்னவளை எனக்குக்கூட விட்டுத்தர
மனமில்லையா" என...
ம்..ம்.. நான் புன்னகைத்தேன்...

கண் கானாத இடத்தில் நீ இருந்தாலும்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான்
நம் காதல் உள்ளது பெண்னே...
கண்னை மூடிக்கொள்...
கனவுக்குள் நான் வருவேன்...
ஆ...ஹா...என்ன ஒரு சுகம்?
தூக்கத்தை விட்டு கனவில் மிதப்பதென்றால்..

என் முச்சை இந்த காற்றுடன் கலந்து
அனுப்புகிறேன்...
உன்னை நலம் விசாரிக்க வருகிறது
உன்னைத் தேடியே....
பதில் கூறி திருப்பி அனுப்பி விடாமல்
உன் முச்சோடு ஒன்று சேர்த்திடு பெண்னே...

உருவமாய் நீ அங்கே இருக்கிறாய்...
உன் உயிரை
என்னிடம் அல்லவா விட்டுச்சென்றாய்...
உயிர் இன்றி உருவத்திற்கு ஏதடி அழகு...?
நீ உன் உயிரோடு சேரும் நாளே அழகு...!

காதலிக்கும் முன்பே கவிதை எழுதினேன்...
உன்னை காதலித்த பின்பே
அந்த கவிதையை விடவும்
ஒரு அழகி இருக்கிறாள் என
உன்னையே எழுத ஆரம்பித்துவிட்டேன்...!

யார் உன் பெயர் சொல்லி அழைத்தாலும்...
முதலில் திரும்புவது என் முகம் தான்...
உன் பெயரைக்கூட யாரும் உச்சரிக்க
என் கர்வம் விடவில்லை...
உன்னைப் போல்
உன் பெயரையும் காதலிக்கிறேன்...
ம்...ம்... சிரிக்கின்றாயா...???

அடிக்கடி கவிதைகள் எழுதுவதால்...
அவை உன்னை என் பக்கம்
திசை திருப்ப அல்ல பெண்னே...
உனக்கென படைக்கப்பட்ட கவிதைகள்
உனக்கே சொந்தமானவை...
அவை உன்னிடமே சேரவேண்டும்
என்பதால் தானடி...

இவை எல்லாம் ஒரு நாள் இரவில்
உன்னவன் நினைவில் கலந்தவைகள்.......
நினைவுகள் தொடரும்....

No comments: