Wednesday, February 20, 2008

ஊடலில் கூடல்...

அன்பென்ற சொந்தம்....
கட்டித்தழுவியது என்னில்....
என்னவளே நீ என் மீது கொண்டுள்ள.....
அளவு கடந்த அன்பால்.....நீ
என்ன செய்கின்றாய் என உனக்கே புரிவதில்லை....
சீற்றத்தில் சிந்திடும் வார்த்தைகள்....
சிந்திய மழைத்துளி போல் அல்ல...
காணாமல் போவதற்கு......
அவை மனது மறக்காத சுனாமி போன்றது.....
உனது ஊடலிலும் நமது கூடல் உள்ளதே....
ஒரு பக்கம் ஆனந்தம்
மறு பக்கம் துயரம்....
எதை எடுத்துக்கொள்வது அன்பே.......???

No comments: