Wednesday, February 20, 2008

உன் பெயர்...

கோடிக்கணக்கான தமிழ் வார்த்தைகளில்...
என்னைக் கவர்ந்தது உன் பெயரே...!
ஆயிரம் கவிதைகள் எழுதிடலாம்....
என் முழுமுதற் கவிதை உன் பெயர் தானடி...
எத்தனை ஸ்வாரஸ்யம்...
உன் பெயரை உச்சரிப்பதென்றால்.....
கோடி முறையும் சலிக்காமல்
உன் பெயரை அழைத்திடுவேன்.....
அத்தனை முறையும் என் இதயத்தின்
மழலை சிரிப்பை நான் உணர்கிறேன்......
அப்படி என்ன உள்ளது என் பெயரில்
என்பாய் நீ....
அப்படி என்ன இல்லை உன் பெயரில்
என்பேன் நான்....

No comments: