Wednesday, February 20, 2008

என்னவளே......

காலை விடிவதேன்.......???
என்னவளே உனக்காகத்தான்....அறிவாயா???
உன்னைக் காணாமல் விடியல்
தவிக்குதாமடி....ம்...ம்... விடியல் மட்டுமா...?
அந்தி மாலை வேளை
அது எனக்காகத்தான்....
உன் பிரிவுச் சுமையை தாங்கச்சொல்கிறது
ஒவ்வொரு மாலைப்பொழுதும்....
சகியே எனக்கு ஆறுதல்களாக
உனது புகைப்படங்கள்.....
எத்தனை காலமடி பிரிவுகள்......
நீ படும் துயரம் நான் அறிவேன் பெண்னே....
உனக்கு இருக்கும் அதே இதயம் தான் எனக்கும்
உன் ஒவ்வொரு துடிப்பும் என்
இதயத்தில்அசைவுகளை ஏற்படுத்துமடி....

No comments: