கண்கள் பார்த்தது ஏராளம்...
இதயம் பார்த்தது உன் தாகம்....
வதனம் கண்டேன் ஓர் காலம்...
கண்டுகொன்டே இருக்க வேண்டும்...
கண் சிமிட்டும் நேரம் வேண்டாமே...
உன்னை பார்ப்பது ஒரு நொடி கூட தடைப்படுகிறதடி....
என் கண்களில் உன்னை நிலை நிறுத்தி வைக்கின்றேன்...
நிலையற்ற இவ்வுலக வாழ்வில்
நிலை பெற்று வாழ்வதற்காக......
ஏனடி உன்னில் இத்தனை அழகா...
உன் முகத்தில் அகத்தின் அழகை கண்டேன்..
அந்த நொடியே என்னை உன்னில் இழந்தேன்...
அனைத்தும் எனக்காகவே என உணர்ந்தேன்...
வாழ்க்கை.....ம்...ம்...வாழப் பழகிக்கொண்டேன்...
என் வாழ்வில் நீ வசந்தமாய் வீசிட வேண்டும்...
என் இனியவளே உன்னை உனர்ந்து கொண்டேன்....
Monday, February 18, 2008
அழகிய இதயம்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment