Monday, February 18, 2008

நானும் நீயும்......

மண்னைத்தொட அந்த மழை படும் பாடு...
இன்று நான் உன்னைத் தொட்ட அந்த வேளை...
மழை மண்னைத் தொட்ட சந்தோஷம் எனக்கு....
நிறம் இல்லாத ஓவியங்கள்...
கலை இல்லாத சிற்ப்பங்கள்...
அர்த்தம் புரியாத கவிகள்...
உயிர் பெற்றனவோ உன் வருகையால்....?
காகிதத்தில் ஓடம் விட்டவன்.. - இன்று
காகிதத்தில் காதல் கடிதம் எழுதுகிறான்...
கற்றுத்தந்தவள் யாரோ???? - பெண்னே
நீ கடைக்கண்ணால் பார்ப்பதேனோ????
உன் சகல அசைவுகளையும் நான் அறிவேன்...
உன் ஒன்றில் மட்டும் நான் அசைந்துவிடுகிறேன்...
உன் அசைவே இல்லாத ஆயிரம் கதை பேசும்
அந்த மெளனத்தில் தானடி....
மழை மண்னைத்தொடுவதால் ஆனந்தம்...
நான் உன்னை அடைவதே பேரின்பம்...

No comments: