Monday, February 18, 2008

அடியோடு சாய்த்தவளே....

முழு நேர நிலவாய்...
என் வாழ்நாள் கழிகிறது....
நிலவே நீ பெளர்னமியாவது எப்போது...?
கரைந்தேன் காதல் கடலில்... - என்
கல்லறை வரை கட்டிடுவேன்...
நம் காதல் மாளிகை...
கல்லறை கூட...நம் கதை சொல்லும்
என்றோ ஒரு நாள்...
அசைந்துகொண்டிருந்த என் வாழ்வை...
அசையா சொத்தாய் நிலை நிறுத்தி..
எனை அடியோடு சாய்த்தாயடி...
உன் மடியினில்....உறங்கிடுவேன்
காலம் கரையும் வரையில்...

No comments: