உன்னிடத்தில் என்னை கவர்ந்தது...
அழகிய புருவங்களின் பாதுகாப்பில்....
அமைதியும் , புயலுமாய் சுற்றித்திரியும்
உன் விழிகளே...!!
எத்தனையோ வார்தைகள் என்னிடம் நீ
பேசியிருக்கிறாய்......
அத்தனையும் புரியவில்லையடி.....
உன் விழி அசைவுகளிலே நான் வீழ்ந்தேனடி....
என் ரசனை உணர்ச்சிகளுக்கு
மெருகூட்டியதுஉன் விழிகள் என்றால்
அது மிகையாகாது...ம்...ம்...
காதலுக்கு கண்கள் இல்லையாம்....
எவனோ குருடன் கிறுக்கிவிட்டான்....
என்னவளே உன் கண்களில் நான் வீழ்ந்து
தவிக்கிறேனடி...
தயவு செய்து என்னை எழுப்பி விடாதே....
Wednesday, February 20, 2008
அவள் விழிகளில்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment