Monday, February 18, 2008

எதிர் பார்க்கும் கல்லறை...

என்னிரு விழிதனில் நித்தமும் காட்சியளிக்கும்
உன் பொன் முகத்தை இனி எப்போதடி கான்பேன்......
கடல் கடந்து நீ இருந்தாலும்
என் மன அலைகளில் உன் நினைவுகளே
அடித்துக் கொண்டிருக்கின்றது.......!
காரணம் அன்று கனவில் கூட நான் காணவில்லை...
இன்று என் நினைவெல்லாம் நீயே இருப்பாய் என.....!
அன்பே என் ஸ்வாசத் தொழிற்ச்சாலை இயங்கும் வரையும்
உன் நினைவுகளையே காற்றாய் ஸ்வாசிக்கிறேன்...
நான் மடிந்தாலும் கூட என் கல்லறை
நித்தமும் உனை எண்ணி உன் வரவை எதிர்பார்க்கும்......!

No comments: