தொலைந்து போன வாழ்விற்குள்
இன்றும் தொலையாமல் பத்திரமாய் எனக்குள்
உனது நினைவு கோலங்கள் மட்டுமே.....!
சட்டைப் பையில் ஒட்டிக்கொண்ட கறையைப் போல
இதயத்தாள்கலில் கிழிக்கப் படாத பக்கங்களாய்...
சிதையாத கவித்துளிகளாய்...
உனது ஞாபகங்கள் கன்னத்தில் வழிந்தோடி
காய்ந்து போகின்றதே......!
என் கலைந்து போன கனவுகளைப் போல
காயங்களால் மட்டுமல்ல
கண்ணீராலும் வாழ்கிறதே என் காதல்.....!
Monday, February 18, 2008
எனது காதல்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment