கண்கள் காண்பதெல்லாம்...
இதயம் உள் எடுப்பதில்லை...
இருந்தும்...
நீ என் இதயம் சென்றவள்...!
என்னையே அறியாமல்
என் மனதில் குடிகொன்டுவிட்டாயடி...!
கண்ணுக்குள் கண்ணாய் உள்ளம் புகுந்தாய்...
உள்ளத்தை கீறிக்கிழித்து விளையாடுகிறாய்...
உறவாக வந்தாய்...
உறையாடிவிட்டு மட்டும் செல்லாமல்...
உயிருள்ளவரை உன்னை தேடுகிறது என் மனம்...!
கண்கள் இமைக்க மறுப்பதில்லை... - அது போல்
என் நினைவுகள் உன்னை விட்டு விலகுவதுமில்லை...
உன் பேச்சு என்னிடம் நின்றிடும் வேளையில்...
என் மூச்சும் நின்று போக
என் உயிரிடம் வேண்டுகோள் விடுகின்றேன்...!
மனதில் திடம் கொண்டவள் நீ...
என் உறவை விபரிக்க வார்தைகள் இல்லை என்னிடம்...!
காலம் முழுவதும் நீ என்னுள் வேண்டும்...!
Saturday, November 8, 2008
இதயத்தின் உலறல்கள்...
Saturday, April 19, 2008
ஒரு நாள் இரவில்...
தூக்கம் இன்றி நான் தவித்த போது...
உன்னுடன் கூவிக் குலாவிய நேரங்கள்
எனை கொன்று குவிக்குதடி இரவிரவாய்...
நாற்பட்ட நோயை குணமாக்க
நாளாந்தம் உன் நினைவுகளையே
அருந்துகிறேன் பினி தீர்க்கும் மருந்தாய்...
வந்ததோ சில காலம்
வாடுகின்றேனடி ஏதோ பல காலம் போல்...
கண்டவுடன் கட்டியனைத்தவளே
உன்னை கண்டவுடன் என் கண்கள் மூடிக்கிடந்தேன்...
வெட்கம் என்ற ஒன்று ஆணுக்கும் உண்டு என
உன்னைப் பார்த்து தான் நான் அறிந்து கொன்டேன்..
ஆயிரம் ஆயிரம் கதை பேசியிருப்போம் அன்று
கதை பேசிய உதடுகளின் பாஷை
நேரில் நான் கண்டறிந்தேன் இன்று...
முத்தம் என்ற சொல்லை
நம் உதடுகள் கண்டபின்பு தான்
நான் உணர்ந்தேன்
வாய் மட்டுமல்ல
உன் உதடுகளும் உரையாடும் என...
இருந்தாலும் நீ கள்ளி..
பெண்னாக இருந்து பட படவென பழகிவிட்டாய்...
ஆணாக நான் உன்னிடம் அடங்கிப் போனேனடி
அன்பை உன்னை விட அதிகமாய்
உன்னிடம் காட்ட முடியாமல்...!
விட்டாயா...?
குழந்தை போல் என் மடியில் வீழ்ந்தாயே..
அச்சச்சோ...
ஒரு கனம் என்ன செய்வதென்று அறியாது
என் மனம் படபடத்தது உன்மை தான்...
இருந்தும் உன்னை எனக்கு மட்டுமே
சொந்தம் கொண்டாடியது என் உள்ளம்.
கட்டியணைத்துவிட்டேன் கண்ணியே உன்னை..
கைகள் அங்கும் இங்கும் பட்டதாக
சொல்லிச் சிரிப்பாய்...
ம்..ம்.. நானும் புன்னகைக்கின்றேன் அளவின்றி..
கோடி சுகம் கொடுத்தவளே
என்னவளே...
உறக்கம் வருகிறதடி...
இன்னொரு நாள்
வேறொரு சிந்தனையில் சந்திக்கின்றேன்....!
சில நேரங்களில்...
தேகம் தீண்டும் தருனம்
Wednesday, April 2, 2008
சந்தோஷம்
சந்தோஷம் இல்லை பெண்னே..
அதையும் தான்டி
எவ்வளவோ சந்தோஷம்
மறைந்து கிடக்கின்றதே உன் மடியில்...
சற்றே என்னை அரவணைத்து பார்
உன் மார்போடு...
சந்தோஷத்தின் எல்லையை காண்பாய்...
Tuesday, April 1, 2008
சிந்திக்கலாமே...
தாகம் கடந்து கிடைக்கும்
தண்ணீருக்கு
தாகத்தின் அருமை அறிவதில்லை...
காலம் கடந்து கிடைக்கும்
காதலுக்கு
காதலின் புனிதம் புரிவதில்லை...
வயதை தொலைத்துத் தவிக்கும்
மனிதனுக்கோ
மனித வாழ்வே புரிவதில்லை...
என் உயிர் தோழியே
அன்று உன் மனம் சென்றவன்
இன்று
உன்னைப் பிரியாத
உன் உயிராய்..
உன் உடலுக்குள்
உனக்குள்
சொந்தமாகிவிட்டான்..
Friday, March 28, 2008
என்னவளே...
பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!
Monday, March 24, 2008
உன் மூச்சின் வாசனையில்...
உனது விழியிலே
என் கனவு வரைகிறேன்..
எனது கவிதையில்
உன் அழகை பறிக்கிறேன்..
புரியாத கவிதை நீ பூப்பூத்தாய்...
நெஞ்சில் இனந்தெரியாதொரு
வலி கொடுத்தாய்...
சுகமாய் ஸ்வாசிக்கின்றேனடி
உன் மூச்சின் வாசனையில்...!
Monday, March 17, 2008
காத்திருப்பேன்...!
காலங்கள் கரைந்தாலும்...
நேரங்கள் நொருங்கினாலும்...
நாட்கள் விரைவாய் நகர்ந்தாலும்...
நமது நினைவுகளுடன் காத்திருப்பேன்...
என்றும் உனக்காக... !
கண்கள் நிறைய கண்ணீருடன்...
இதயம் நிறைந்த அன்புடன்...
காத்திருப்பேன்...!
நெஞ்சத்தைக் கிள்ளாதே...
உன் முக மலர்ச்சியில் ஆயிரம்
கவிதையை எழுதிட்ட நான்...
உன் அர்த்தமற்ற கோவத்தில்
அர்த்தமற்றுப் போகின்றேன் நான்...
Thursday, March 13, 2008
ஒரு நாள் இரவில் என் நினைவில்...
கவிதை எழுத யோசித்தேன்
கவிதை எழுதுவதை விட
உன்னையே கவிதையாய் எழுத
அந்த கவிதையே என்னிடம் கெஞ்சியது
நான் கூறினேன்...
அவள் எனக்கு மட்டுமே கவிதை
அவளை நான் மட்டுமே
படிக்க வேண்டும் என்று...
அப்போது கவிதை ஒன்றே ஒன்று கூறியது...
"உன்னவளை எனக்குக்கூட விட்டுத்தர
மனமில்லையா" என...
ம்..ம்.. நான் புன்னகைத்தேன்...
கண் கானாத இடத்தில் நீ இருந்தாலும்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான்
நம் காதல் உள்ளது பெண்னே...
கண்னை மூடிக்கொள்...
கனவுக்குள் நான் வருவேன்...
ஆ...ஹா...என்ன ஒரு சுகம்?
தூக்கத்தை விட்டு கனவில் மிதப்பதென்றால்..
என் முச்சை இந்த காற்றுடன் கலந்து
அனுப்புகிறேன்...
உன்னை நலம் விசாரிக்க வருகிறது
உன்னைத் தேடியே....
பதில் கூறி திருப்பி அனுப்பி விடாமல்
உன் முச்சோடு ஒன்று சேர்த்திடு பெண்னே...
உருவமாய் நீ அங்கே இருக்கிறாய்...
உன் உயிரை
என்னிடம் அல்லவா விட்டுச்சென்றாய்...
உயிர் இன்றி உருவத்திற்கு ஏதடி அழகு...?
நீ உன் உயிரோடு சேரும் நாளே அழகு...!
காதலிக்கும் முன்பே கவிதை எழுதினேன்...
உன்னை காதலித்த பின்பே
அந்த கவிதையை விடவும்
ஒரு அழகி இருக்கிறாள் என
உன்னையே எழுத ஆரம்பித்துவிட்டேன்...!
யார் உன் பெயர் சொல்லி அழைத்தாலும்...
முதலில் திரும்புவது என் முகம் தான்...
உன் பெயரைக்கூட யாரும் உச்சரிக்க
என் கர்வம் விடவில்லை...
உன்னைப் போல்
உன் பெயரையும் காதலிக்கிறேன்...
ம்...ம்... சிரிக்கின்றாயா...???
அடிக்கடி கவிதைகள் எழுதுவதால்...
அவை உன்னை என் பக்கம்
திசை திருப்ப அல்ல பெண்னே...
உனக்கென படைக்கப்பட்ட கவிதைகள்
உனக்கே சொந்தமானவை...
அவை உன்னிடமே சேரவேண்டும்
என்பதால் தானடி...
இவை எல்லாம் ஒரு நாள் இரவில்
உன்னவன் நினைவில் கலந்தவைகள்.......
நினைவுகள் தொடரும்....
Tuesday, March 11, 2008
என் விடியல் நீ இரவும் நீ...!
ஒவ்வொரு நாளும் விடியலாம்..
அதில் உன்னுடன் இருக்கும் நேரம் என்று வரும்
என்பது தான் என்னுடைய விடியல்...!
ஒவ்வொரு நாளும்
இரவுகள் இல்லாமல் இல்லை...
அதில் உன் கனவுகள்
என்னை தழுவும் நேரம்
என்னுடைய இரவுகளாக மலருமடி...!
Monday, March 10, 2008
என் ஆசை...
உயிரற்ற எல்லாம்
உன் ஒரு சிறு புன்னகையால்
உயிர்த்தெழுந்தது பெண்னே...
எங்கே உன் வெக்கம்???
எனக்குள் புதைக்கப்பட்டதுவோ...?
காற்றில்லா நேரத்திலும் கூட
உன் முத்தத்தையே காற்றாய்
ஸ்வாசித்திடுவேன் பெண்னே...
உயிர் பிரியும் நேரம் கூட
உன் கருவறையே என் கல்லறையாய்
மலரவேண்டும் பெண்னே...!
Saturday, March 8, 2008
உன்னோடு கனவில்...
உன் இமைகள் எனும் பாய்விரி...
என் கனவுகள் அங்கே உறங்கட்டும்...
உன் பார்வை கொண்டு போர்த்திடு...
ஓரிரு வார்த்தைகளால் நீ எனை தொடு...
என் ஆசைக் கனவுகள் அசையட்டும்...
எதையும் மறந்து காதலி...
உன் இதயம் திறந்து பாரடி...
Thursday, March 6, 2008
விழியிலே...
உன் விழியில் கரைந்தேன்..
கனவில் விழித்தேன்...
உன்னை துரத்தி துரத்தி பிடித்தேன்...
நெஞ்ஜில் விரும்பி இடத்தைப் பிடித்தேன்...
சொல்லாயோ..வான் மழையே...
உயிர் தாங்காது நீ இல்லையேல்...
வாடுகிறேன்...
பார்க்க பார்க்க தோனுதே...
காதல் கொண்ட ஆசையில்...
காணவில்லை உன் முகம்...
தூக்கமில்லை நித்தமும்...
கவிதை சொல்ல தோனுதே...
உந்தன் கண்கள் பார்க்கையில்...
இருந்தோம் இமையாய் ஒன்றாக...
பிரிந்தோம் கண்ணீர்த்துளியாக...
Tuesday, March 4, 2008
வினோதமானவளே...
வாழ்க்கை இனிக்கிறதே...
வாரம் ஏழு நாளும் உன்னைப்பற்றியே
நினைப்பதால்...
வயசும் கரைகிறதே...
நீ அருகில் இல்லை என்பதால்...
நாட்கள் இதோ செல்கின்றன
அதோ செல்கின்றன...
உன்னுடனான நாட்கள் என்று காண்பேன்..?
ஆயிரம் முறை துடித்தாலும்...
ஒரு முறையேனும் உன்னை
காணமுடியாமல்..
தவிக்குதடி மனசு...
நிழலாய் என் கண்களில் உன்னை
கண்டுகொன்டுதான் இருக்கிறேன்..
நிஜமாய் நீ என்னை விட்டு கண் கானா
இடத்தில் அல்லவா இருக்கிறாய்...
அழகான காதல் அதை நீதான் கொடுத்தாய்...
கூடாவே கவலைகளையும் அல்லவா கொடுத்தாய்...
Saturday, March 1, 2008
காத்திருப்பேன் காதலியே!
காத்திருந்தேன் காதலியே!
காணவில்லை உன் முகத்தை..
காண்பேன் என இருந்தேன்!
கண்டேன் ஒரு தினத்தில்..
கதைத்தேன் நொடிப்பொழுது!
களைந்தாய் மறுகனத்தில்..
கரைந்தேன் சிறு விழியில்...
காத்திருப்பேன் காதலியே உனக்காக..!
என்னவளே...
கண்களால் பேசி
என் மனதை
உனக்கென சொந்தமாக்கி
என் தூக்கத்தை பறித்து
எனக்குள் ஆயிரம் கனவுகளை
தோன்றச்செய்து
என்னையே எனக்கு
மறக்க வைத்தவளே...
உன்னாலே
பூக்களில் தேடிப்பார்த்தேன்...
வாசனைகள் இல்லையே...
வாசனைகள் அத்தனையும்
உன்னிடத்தில் சேர்ந்ததோ...
இசை கேட்டேன் உன்னாலே...
திசை பார்த்தேன் தன்னாலே...
மொழி அறிந்தேன் உன்னாலே...
கவி வடித்தேன் தன்னாலே...
உனக்காக...
என் தூக்கம் விற்கப்பட்டது
உன் கனவுகளுக்காக...
என் கவலைகள் மறக்கப்பட்டன
உன் புன்னகையால்...
உன் நினைவுகளால் மெளனமானது
என் வாய் மட்டுமல்ல என் இதயமும் தான்...
என் உள்ளத்தில் ஊஞ்சலாடும்
உத்தமியே நலமா...?
ஆக்கியதோ பல கவிகள் - வஞ்சியே
உனை எண்ணி...
நீ எனக்கென வடித்ததெல்லாம்
உன் புன்னகை ஒன்றுதான்...
ஆயிரம் கவிதைகள் கிறுக்கிட்டாலும்...
உன் சிறு புன்னகைக்கு ஈடாகாதடி...
அழகிலிருந்தால் அழகாய் இருப்பாய்...
பூக்களே அவள் கூந்தலில் வசித்துப்பார்
நீ அழகாய் இருப்பாய்...
வர்ணங்களே அவள் உடையில் ஒட்டிக்கொள்..
நீயும் அழகாய் இருப்பாய்...
வைரமே அவள் மூக்குத்தியில் ஒட்டிக்கொள்..
உன் மதிப்பு உனக்கே தெரியும்...
விடியலே அவள் முகம் காண விடியுங்கள்...
நிலவுக்கே வேலையில்லாமல் போய்விடுமோ...
Wednesday, February 27, 2008
நீ எனக்கே..!
கவிதை நான் கிறுக்கிட
அன்பே உந்தன் கண்கள் கொடு..
காற்றை நான் ஸ்வாசிக்க
அன்பே உந்தன் காதல் கொடு...
விடியல் நான் கண்கள் முழித்திட...
அன்பே உந்தன் புன்னகை கொடு...
இனிமைகள் நீயும் நானும் கண்டிட..
அன்பே உன்னையே எனக்குக்கொடு...
நெஞ்சினிலே...
என் கண்னோடு கவி பாடிய
உன் கண்கள்..
என் காதோடு உரையாடிய
உன் விரல்கள்...
என் உதடுகளில்
உன் உதடுகளின் சினுங்கள்...
என் உடல் எங்கும் ஓவியம் வரைந்திட்ட
உன் கைகள்...
என் உயிரோடு கலந்திட்ட
உன் பெண்மையின் வாசனைகள்...
என்னை கலவாக ரசித்திடும்
உன் திருட்டுப் பார்வைகள்...
என்னை முதலில் தாக்கிய
உன் கூந்தலின் வாசனைகள்...
என் மடியில்
உன் மழலையான குறும்புகள்...
என்னுடன் செல்லமான
உன் வார்த்தைகள்...
என்றுமே என் நெஞ்சோடு தான்...
Saturday, February 23, 2008
உன்னருகே நானிருந்தால்...
இரவு தூங்கும் வேளையில்...
தனிமை என்னை கொல்லுதே...
நீ என்னிடம் இருக்கும் வரையில்
என்னை எனக்கே புரியாமல்...
உன்னையே ரசித்துக்கொன்டிருந்தேன்..!
புயலாய் வந்தாய்..-
நெஞ்சில்பூகம்பம் தந்தாய்..
ஓவியமாய் இருந்த என்னை-உயிர்
கொடுத்துப் பார்த்தவளே...
உயிரூட்டிய உன்னருகே
நான் எப்பொழுதும் இருக்க வேண்டும்...
Friday, February 22, 2008
என் சகியே...
பேச்சை நிறுத்தப் பார்க்கையில்...
முச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்...
மொத்தம் கேட்கத்தோனுதே..
நிலவு அழகா? எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருப்பதனால்...
நம் உறவின் அர்த்தம் உணர்கிறேன்
நான் ஒவ்வொரு நொடியும்...
Thursday, February 21, 2008
என் அழகியே...
கண்ணுக்கு மையும்...
முகத்திற்கு பொலிவும்...
உதட்டுக்குச் சாயமும்...
உடலுக்கு வாசனையும்...
பேச்சில் பாவனையும்...
அசைவில் உணர்வுகளும்...
நடையில் மழலையும்...
இவை எல்லாவற்றயும் விட..
உன் சினுங்கலில் நான் சிதறிவிட்டேனடி...
அன்புடன்...
அன்பே என் ஆருயிரே...
உந்தன் அரவனைப்பில்..
அடங்கிக்கிடந்த என்னை...
இன்று தனிமரமாய்..
தவிக்கவிட்டதேனோ...?
என் தூரத்து நிலவே...
என் தாகம் அறிவாயா...?
இது தவித்த வாய்க்கு தண்ணி அல்ல...
துடித்துக்கொன்டிருக்கும்
என் உயிர்க்கு முச்சு...
உன் அரவனைப்பிற்காக காதிருக்கும்
என்றும் அன்புடன் உன்னவன்...!
Wednesday, February 20, 2008
நீ கவிதை எனக்கு....
இனம் தெரியாத ஒருவித நட்பு நமக்குள்ளே...
இன்று வாழ்க்கையின் எல்லை வரை
நம்மை இணைய வைத்துள்ளது...
என்றும் உன் நினைவுகளையே கிறுக்குகின்றேன்..
நீ கவிதை எனக்கு...- கவிதைக்கு
ரசிகனாக நான் உனக்கு....
உன் ஒவ்வொரு அசைவுகளும்
என் கவிதைக்கு ஒவ்வொரு அர்த்தமடி சகியே..
உன் வார்த்தைகளில் தான்
என் கவிதைஉயிர் வாழ்கிறது பெண்னே..!
என்னவளே......
காலை விடிவதேன்.......???
என்னவளே உனக்காகத்தான்....அறிவாயா???
உன்னைக் காணாமல் விடியல்
தவிக்குதாமடி....ம்...ம்... விடியல் மட்டுமா...?
அந்தி மாலை வேளை
அது எனக்காகத்தான்....
உன் பிரிவுச் சுமையை தாங்கச்சொல்கிறது
ஒவ்வொரு மாலைப்பொழுதும்....
சகியே எனக்கு ஆறுதல்களாக
உனது புகைப்படங்கள்.....
எத்தனை காலமடி பிரிவுகள்......
நீ படும் துயரம் நான் அறிவேன் பெண்னே....
உனக்கு இருக்கும் அதே இதயம் தான் எனக்கும்
உன் ஒவ்வொரு துடிப்பும் என்
இதயத்தில்அசைவுகளை ஏற்படுத்துமடி....
காதல்....
மொழி அறிவதில்லை...
மதம் பார்ப்பதில்லை...
ஊடல்கள் மூலம் கூடல்கள்....
கூடல்கள் இன்றி காதல் இங்கு ஏதடி....
தனிமைகள் உன்னை பாடு படுத்துமே...
எப்படி தாங்கிக்கொல்கிறாய் பெண்னே......
சூரியன் உன்னை சுட்டெறித்தாலும்.....
சூடு நீ உனர்வதில்லை.....
காரணம் காதல் உன்னை தன்மை படுத்தியதோ....
பரீட்சை எழுதி விட்டு காத்திருக்கும்
மாணவன் போல்...
உன் மனம் திக்கித் தவிக்கிறதா பெண்னே.....
உன் உளறல்கல் எல்லாம் உன்னவன் நெஞ்ஜில்
நீங்காது இடம் பிடித்துக்கொண்ட கவிதைகள்.....
என்னவளே உன் நினைவுகள் என்னை
அனு அனுவாய் கொன்று குவிக்குதடி....
காற்றில் பறந்த காற்றாடி தன்நூலை இழந்து
செயலற்றுப் போனது போலே
உன்னைப் பிரிந்து என் மனம்
அனு அனுவாய் செயலற்றுப் போகுதடி பெண்னே.....!
முத்தங்கள்...ஹைகூ.....
சத்தமின்றி யோசித்த எண்ணங்கள்....
உதடுகலில் யுத்தம் நடத்தின....
நான் மட்டுமா நினைத்தேன்....
நீ கூட காட்டிவிட்டாய்....
நீண்ட நாள் போரட்டத்தின் பின்கிடைத்த
முதல் வெற்றி....
காதலுக்கு கண்கள் இல்லையாம்....
உதடுகளை விட்டுவிட்டார்கள்.....
உலகின் தலை சிறந்த மொழி...
காதலின் ஏணிப்படிகள்.....
தனிமை...
இருள் படர்ந்த நரகமாகியதோ...
நான் வசிக்கும் மாளிகை....
முற்கள் நிறைந்த பாதையாக மாறியதோ....
நான் வலம் வரும் பாதைகள்.....
சுட்டெறிக்க சூரியன் தயாராகிறான்...
நான் திரும்பிடும் திசைகள் எங்கும்...!
இதய வலியே தெரியாத எனக்கு
இப்பொழுதெல்லாம் உணர முடிகிறது.....
இதமான இம்சை தான்...
இருந்தாலும்அனுபவிப்பது கொடுமையடி.....
நாட்கள் இதோ செல்கின்றன.....
அதோ செல்கின்றன.....
தனிமை இனிமையாகும் தருணம் வாராதா???
கண்களால் ஏனடி மாயங்கள்....
இமைகள் கூட தேவையில்லையடி....
கண்கள் இமைப்பதால்..
உன்னைப் பார்ப்பது...
ஒரு நொடி கூட தடைப் படுகிறதே....
மனதின் சோகங்கள்...
உணர்ச்சிகளாக உன் கண்ணீரா???
மறந்தாயா அன்பே ....
எனக்கும் கண்கள் உண்டு என......???
சோக கீதம் இசைப்பதற்கு இதுவல்ல நேரம்....
கண்களை மூடி என் காட்சிகளை
உள் நிறுத்தி வை....
இனியா கீதம் உன்னைத் தாலாட்டும்....
காதலின் நிறம்....
கண்கள் காணும் அணைத்தும்....
இதயத்திற்கு சொந்தமில்லை....
இதயம் சொந்தமாக என்னுவது....
தனக்கே உரியதான உயிரைத்தான்.....
இதயம் வரை வந்துவிட்டு...
ஸ்வாசிக்க மறுப்பதேனடி.....
உந்தன் ஸ்வாசத்தில் தானடி.....
நம் காதல் உயிர் வாழ்கிறது....
உள் வந்த உணர்வுகளை...
வெளியிட மறுக்காதே பெண்னே....
எனக்குச் சொந்தமாக உயிர் தவிற
வேறு ஒன்றுமே இல்லை...
உன்னைப் பார்த்திடும் முன்...
உயிர் கூட உன் வசமானதே....
உன்னைக் கண்ட நாள் முதல்......
என் உயிரின் இறுதி மூச்சு வரைக்கும்.....
உன்னைக் காதலிப்பேன்.....
உயிர் பிரியும் போதும்.....
உன் நினைவுகளுடனேயே பிரியட்டும்....
பெண்னே நீ எங்கு சென்றாயடி.....
நிலாவைத்தேடினேன்....
இரவிலே உன் துணைக்காக....
இரவியை தேடினேன்....
இனியவளே உன்னை காண்பதற்காக.....
உன் இதயத்தில் இடம் தேடினேன்...
இனிமையான உன் காதலுக்காக....
நிலவும் கிடைத்தது...
இரவியும் வந்தான்....
இதயமும் கண்டேன்....
பெண்னே நீ எங்கே சென்றாயடி.....?
அவள் விழிகளில்.....
உன்னிடத்தில் என்னை கவர்ந்தது...
அழகிய புருவங்களின் பாதுகாப்பில்....
அமைதியும் , புயலுமாய் சுற்றித்திரியும்
உன் விழிகளே...!!
எத்தனையோ வார்தைகள் என்னிடம் நீ
பேசியிருக்கிறாய்......
அத்தனையும் புரியவில்லையடி.....
உன் விழி அசைவுகளிலே நான் வீழ்ந்தேனடி....
என் ரசனை உணர்ச்சிகளுக்கு
மெருகூட்டியதுஉன் விழிகள் என்றால்
அது மிகையாகாது...ம்...ம்...
காதலுக்கு கண்கள் இல்லையாம்....
எவனோ குருடன் கிறுக்கிவிட்டான்....
என்னவளே உன் கண்களில் நான் வீழ்ந்து
தவிக்கிறேனடி...
தயவு செய்து என்னை எழுப்பி விடாதே....
எங்கே உன் மெளனம்.....
நீ சிதறிய புன்னகைகள்...
என் கவிதையின் வரிகளாக.....
நீ சிந்திய வியர்வைகள்....
என் கவிதையில் சிக்கிடும் பேனை மையாக....
நீ விழிகளை சுற்றிடும் பொழுதினில்.....
என் கவிதைகள் அர்த்தம் ஆகின்றன....
நீ கையெழுத்திடும் போது தான்....
என் கவிதைகள் முழுமையாகின்றன.....
எங்கே உன் மெளனம்...
அங்கே என் முடிவு....!
வேண்டும் ஒரு தருணம்....
இப்பிறவியில் மரணித்தால்............
உன் பெயர்...
கோடிக்கணக்கான தமிழ் வார்த்தைகளில்...
என்னைக் கவர்ந்தது உன் பெயரே...!
ஆயிரம் கவிதைகள் எழுதிடலாம்....
என் முழுமுதற் கவிதை உன் பெயர் தானடி...
எத்தனை ஸ்வாரஸ்யம்...
உன் பெயரை உச்சரிப்பதென்றால்.....
கோடி முறையும் சலிக்காமல்
உன் பெயரை அழைத்திடுவேன்.....
அத்தனை முறையும் என் இதயத்தின்
மழலை சிரிப்பை நான் உணர்கிறேன்......
அப்படி என்ன உள்ளது என் பெயரில்
என்பாய் நீ....
அப்படி என்ன இல்லை உன் பெயரில்
என்பேன் நான்....
மனதில்.....
பார்வையில் பல கதைகள் நான் கிறுக்கிடவே...
உன் வேதனையில் என் மனம் நொருங்கிடவே...
நினைத்தேனா? இவை நடக்கும் என ???
நெருங்கும் போது சோகம் தெரியவில்லை....
நொருங்கும் போதே சோகத்தின் வலி உண்ர்ந்தேன்!!!
நீ இருக்கும் போது உன்னை புரியவில்லை......
பெண்ணே நீ சென்றாய்.....
அன்றே நான் என்னை இழந்தேன்.........
மீட்டிப் பார்க்கிறேன் என்னுடைய நாளேடுகளை...
அங்கே உன் பெயர் தவிர வேறு ஏதும்
என் கண்ணுக்கு அகப்படவில்லையடி....
காதலிக்கும் முன் ஒரு கனம் யோசித்து இருந்தால்..
கதலித்த பின் ஏன் இந்த கலக்கம்.....?
கண்ணை விரும்பினேன்...
உன்னை எனக்கு காட்டி கொடுத்ததால்....
என் உயிரை விரும்பினேன்....
உன்னோடு வாழப் போகிறதே என்பதனால்.....
என்னையே விரும்பினேன்.....
நீ வந்த பின் என்னில் ஏற்பட்ட மாற்றத்தால்......
இவை அனைத்தும் பொய்யானால்...
என்னையே நான் இழக்க நேரிடலாம்....பெண்ணே !!
வந்து விடு பெண்ணே ...என்னிடமே வந்து விடு.........!!!
ஊடலில் கூடல்...
அன்பென்ற சொந்தம்....
கட்டித்தழுவியது என்னில்....
என்னவளே நீ என் மீது கொண்டுள்ள.....
அளவு கடந்த அன்பால்.....நீ
என்ன செய்கின்றாய் என உனக்கே புரிவதில்லை....
சீற்றத்தில் சிந்திடும் வார்த்தைகள்....
சிந்திய மழைத்துளி போல் அல்ல...
காணாமல் போவதற்கு......
அவை மனது மறக்காத சுனாமி போன்றது.....
உனது ஊடலிலும் நமது கூடல் உள்ளதே....
ஒரு பக்கம் ஆனந்தம்
மறு பக்கம் துயரம்....
எதை எடுத்துக்கொள்வது அன்பே.......???
காதலில்........
இதுவரை எங்கிருந்தோம்........
இதயமும் உன்னை கேட்கிறதே......
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் ..?
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்.....?
உன் விழி வலையில் சிக்கிவிட்ட
என் இதயப் பறவை இனி எப்படி பறக்கும்....?
முற்கள் நிரைந்த காதல் பயணத்தில்.....
காயப்பட்டது நம் பாதங்கள் மட்டுமல்ல....
நம் இதயங்களும் தான்.......
கண்கள் தானே பேசிக்கொண்டன.....
வலியை இதயங்கள் மட்டும் அனுபவிக்கின்றதே..!!!
பிரிவின் வேதனை தொடர்கிறதே.....
மறக்கவில்லையடி என் சகியே...
கண்கள் காண்பதெல்லாம்
நெஞ்சம் உள் எடுப்பதில்லை.....
கால்கள் பின் தொடர்ந்து செல்கின்றதே......
பெண்னே உன் நிழல் கண்டு தானோ ?..
கைகளும் ஆனந்தம் கொல்கின்றன....
அன்பே உன்னை அனைத்திடும் பொழுதினில்....
உதடுகளும் கவிதைகள் வரைகின்றன....
காகிதமாய் மாறியது உன் மேனியோ......
அன்பே நினைவிருக்கின்றதா ?
நீ அடிக்கடி கேட்பாய் என்னிடம்.....
"ஷங்கர் என்னை நினைத்தாயா ?" என...
நான் உன்னை நினைப்பதே இல்லையடி...
உன்னை மறந்தால் தானே நினைவுகள்.....
ஸ்வாசிக்க மனிதன் மறப்பதுன்டா.......?
ஷங்கர் in உயிர்த் தோழி....
இனையத்தின் மூலமாய் இணைந்தோம்....
இன்றோடு நாட்கள் பல.....
என் இதயத்தில் குடிகொண்டு வாழ்பவளே....
கூலியாக உன் அன்பை மட்டுமே
கேட்டுக்கொள்கிறேன்....
நீ சோர்ந்து போனால்....
என் இதயம் வாடிப் போகுமடி....
என் உயிரே நான் உன் மீது கொண்டஅன்பை
நீ உணர்வாயா........?
பழகிய நாட்கள் என் வாழ்வின் உயிர் மூச்சு...
உன்னுடன் கதைத்த உலறல்கள் எல்லாம்
என் நெஞ்சில் கல்வெட்டு போலே
கல்லாகிப் போனதடி.....
என்றும் அன்புடன் என் நெஞ்சில்
வாழும்....வாழ்ந்திடும்.......உன் உறவு...
கூடல் நகர்.....!
உயிர் இரன்டாகினோம்
உடல் ஒன்றாகினோம்....
அங்கும் இங்கும் புன்னகையே......
சோகங்கள் தெரியவில்லை.....
இன்பம் ஒன்றை தவிற....
நெடுநாள் ஆசைகள்.....
சேர வேண்டிய உறவுகள்....
என்றும் பிரியா இதயங்கள்....
எண்ணற்ற ஏக்கங்கள்...
ஆயிரம் ஆயிரம் தவிப்புகள்....
நிறைவேறிய ஆசைகள்...
எத்தனை நாள் கனவுகள்....
வார்த்தைகள் ஊமையாகியதோ.....
சில்மிசங்கள் உறையாடியதோ.....
இந்த நொடியே இறந்து விடலம் போலும்...
வழ்வில் அனைத்தும் பெற்றது போல்
ஒரு வித பூரிப்பு.....!!!
வேன்டுமடி காலம் தோறும்....
With love allways urs ஷங்கர்!!!
பிரிவில் ஒரு சுகம் கண்டேன்..
கஷ்டப்பட்டேன் அது காதலுக்காக.......
இஷ்டப்பட்டேன் அது உனக்காக........
துன்பப்பட்டேன் நம் பிரிவுக்காக......
இன்பம் கொண்டேன்
பிரிவிலும் இனிமை கண்டதால்......
பிரிவிலும் ஒரு சுகம்.....
உண்ர்ந்து கொண்டவன் நான்.....!
என்னவளே...
இதமான இரவுகள்...
கருத்தான கனவுகள்...
உன்னதமான உண்ர்வுகள்....
தனித்துவமான எண்ணங்கள்....
தெரிந்திடவில்லை இவை அனைத்தும்
நீ வரும்முன்னே...!
அறிந்து கொண்டேன் என்னவளே
உன் வருகையினால் நானே!
காதலின் வலி...
நான் எனக்காக சிந்தித்த நாட்களை விட..
உனக்காக யோசித்ததே அதிகம்...!
ஒரு பார்வைக்காக துடித்தேன் அன்று...
பார்க்கவே கூடாதென இருக்கிறேன் இன்று...!
நான் உன்னை மட்டுமே நினைத்தேன்...
நீ உன்னைக் கூட யோசிக்கவில்லை....!
பெண்ணே நான் உன்னிடம் வேண்டுவதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்.....
இனி ஒரு முறையும் உன் மனதில்
என்னை நினைத்திடாதே....
அதன் வலி மிகவும் கொடுமையானது....!
Tuesday, February 19, 2008
உணர்வுகள்.....
உணர்வுகள்...உன்னை உரசிப் பார்த்திட நினைக்க
உள்ளம் அதனை தடுக்க நினைக்கவே இல்லை.....
உள்ளத்தால் மட்டும் அல்ல ....
உணர்வுகளாலும் காதல் உண்டு....
ஏன் அதனை உள்ளம் தடுக்க???
என் உள்ளத்துக்குள் உன்னை கொண்டு சென்றதே
உணர்வுகள் தான்..
மறந்து விட்டாயா???
சென்று விடு...
விண்ணேடு வாழாத நிலவெதுக்கு...
கண்ணொடு வாழாத இமைகள் எதுக்கு...
நெஞ்ஜோடு வாழாத கனவுகள் எதுக்கு ...
அன்புடன் வாழாத உறவுகள் எதுக்கு ...
என்னுடன் வாழாத ஆசைகள் எதுக்கு ...
உன்னுடன் வாழாத என் உயிர் எதுக்கு ...
உயிரே நீ தேவையில்லை....
உறவாக நீ இல்லை என்றால்......
சென்று விடு உயிரே என்னை விட்டு.........
நினைவெல்லாம் நீதான்...
நெஞ்சம் பல முறை ஏங்கியது...
ஒரு முறையாவது உன்னுடன் வாழவேண்டும் என...
கண்கள் மூடியே கிடக்கின்றது...
என் விடியல் நீயாகவே வரவேண்டும் என...
என் கால்கள் தவம் கிடக்கின்றன...
உன் விரல் பிடித்து நடக்கத்தானா???
என் நிழல்கூட இன்று எனக்கு சொந்தம் இல்லை
உயிரோடு உறவாடிய உனக்கே
எழுதி கொடுத்துவிட்டேன்...
உன் கையில் உன் குழந்தையாய் வாழத்துடிக்கின்றேன்...
Monday, February 18, 2008
அத்தணையும் வேண்டும்....
அழகான உன் கண்னின்.....
அன்பான பார்வை வேண்டும்...
அதில் என்னை மட்டுமே நீ பார்க்க வேண்டும்.....
தீராத காதல் வேண்டும்...
காதல் என்ற நோய் தீர....மருந்தாக
நீ என்னருகே வரவேண்டும்.....
தெவிட்டாத இன்பம் வேண்டும்.....
என்றும் சலிக்காத-உன் காதல் வேண்டும்...
உன் சினுங்கல் - அது என்றும் வேண்டும்....
உன் புன்னகை...அது என்றென்றும் வேண்டும்...
இவை அத்தனையும் வேண்டுமென்றால்....
என்னவளே....நீ என் அருகில் வேண்டும்.....
ஒரு காதல் கடிதம்........
அன்பே....!
என் ஆறுயிரே...
இனைந்தோம் இணையம் மூலமாய்....
இன்று வரை நமக்குள்....சந்தோஷமும் துக்கமும்.....
மாறி மாறி வந்த வன்னமே.......
நீ என்னை நினைக்கின்றாய் - அதை
நீ சொல்லி நான் புரியவேன்டியதில்லை கண்னே...
என் மனம் அறியும் உன் நிலை....
ஆயிரம் ஆயிரம் கதை பேசினாலும்....
உன் முகம் பார்த்து கதைப்பது போலாகுமா...
அப்படியே உன்னை உற்றுப் பார்த்துக்கொன்டே...
இருந்திடும் போதினில் சோகம் தெரிவதில்லை...
என் உயிரில் கலந்து விட்டதடி....உன்
பெண்மையின் வாசனைகள்....
என் ஸ்வாசம் என்னை மறந்து...
உன்னையே ஸ்வாசிக்க ஆரம்பித்துவிட்டன...
பிரிவுகள் நிரந்தரமில்லை பெண்னே....
நமது ஜீவன் பிரியும் வரையில்.....
என்றும் உனக்காக காத்திருக்கும்.....
உன் அன்பின் -ஷங்கர்......
என் அன்பான தோழியே....
அன்பே உன்னை என்னில் நினைத்திடவில்லை....
மனதில் விதைத்து வைத்தேனடி.....
உனக்கு வேராக நான் எப்பொழுதும் இருப்பேன்.
என்னவளே நீ வாடினால்......
நான் வந்த இடம் தெரியாமல் போய்விடுவேன்...
நான் போகவும் மாட்டேன்...
உன்னை வாட விடவும் மாட்டேன்....
என்றும் என் நெஞ்சில் நீ பூத்துக்குலுங்கும்
அந்த சந்தோஷம்...அதில் என் இன்பமடி.....
அழகிய இதயம்....
கண்கள் பார்த்தது ஏராளம்...
இதயம் பார்த்தது உன் தாகம்....
வதனம் கண்டேன் ஓர் காலம்...
கண்டுகொன்டே இருக்க வேண்டும்...
கண் சிமிட்டும் நேரம் வேண்டாமே...
உன்னை பார்ப்பது ஒரு நொடி கூட தடைப்படுகிறதடி....
என் கண்களில் உன்னை நிலை நிறுத்தி வைக்கின்றேன்...
நிலையற்ற இவ்வுலக வாழ்வில்
நிலை பெற்று வாழ்வதற்காக......
ஏனடி உன்னில் இத்தனை அழகா...
உன் முகத்தில் அகத்தின் அழகை கண்டேன்..
அந்த நொடியே என்னை உன்னில் இழந்தேன்...
அனைத்தும் எனக்காகவே என உணர்ந்தேன்...
வாழ்க்கை.....ம்...ம்...வாழப் பழகிக்கொண்டேன்...
என் வாழ்வில் நீ வசந்தமாய் வீசிட வேண்டும்...
என் இனியவளே உன்னை உனர்ந்து கொண்டேன்....
ஷங்கர் in சிந்தனை..
எமாற்றம்...
உலகம் அறிந்த பாஷை....
மனிதன் இலகுவாக வீழும் பாதை...
காதல்...
தனிமைக்கு விடுதலை....
இனிமைக்கு அடித்தளம்...
முத்தம்..
காதலின் மொழி...
ஊமை கூட அறிந்த பாஷை...
யுத்தம்..
முடிவுக்கு வரப்போவதுமில்லை...
முடியப்போவதுமில்லை...
பெண்கள்..
பொறுமைக்கு புகழ்...
வறுமையிலும் புன்னகை...
ஆண்கள்..
காரியம் முடிந்துவிட்டால் அடங்கிவிடுவான்..
அடுத்த காரியத்துக்கு அடிபோடு..
என்னவளே..
என் கனவுக்குள் சிக்கிய அழகிய உருவம் நீ....
உன் இடைவிடா அழகில் நீந்த வந்தவன் நான்..
நான் கண் விழித்தாலும்
நீ என்னை விட்டு சென்றிடுவாய்...
நான் கரை சேர்ந்தாலும்
உன்னை இழந்திடுவேண்...
நான் கண் விழிக்கப் போவதுமில்லை...
கரை சேரப் போவதுமில்லை...
உன்னை பிரியப் போவதுமில்லை...
உன்னை அடைவதே என் ஜனனம்....
என் உயிர்த் தோழியே.......
அழகே உன்னை நேசிக்கின்றேன்.....
உயிராய் உன்னை ஸ்வாசிக்கின்றேன்.....
உன்னை காணும் முன் நட்பின் ஆழம்
எனக்கு தெரியவில்லையடி....
உன்னைக் கண்டேன்.....
நட்பின் ஆழமும் கண்டேன்.....
கரை காண விரும்பவில்லையடி.....
உன்னில் வீழ்ந்தேனடி......
எழவும் விரும்பவில்லையடி.....
முகவரி..
முகவரி இல்லாத எனக்கு
முகவரி கொடுத்தவள் நீ
என் முகம் பார்க்க முன்னிற்பவள் நீ
கண்ணை கவர வண்ண புடவை அணிந்தவள் நீ
காது கேட்க கானம் பாடியவள் நீ
என் இதயத்தின் உள்ளே மெல்ல நுழைந்தவள் நீ
காதலின் உணர்வுகளை என்னுள் உணர்தியவள் நீ
முதலில் நீ யார் என்று தெரியவில்லை -
இப்போது நீ இல்லாமல் நான் யாரென்று தெரியவில்லை
உன் கண்களை கண்டேன், கவிதை எழுதினேன்
உன் சலனம் கேட்டேன், சங்கீதம் இயற்றினேன்
உன் நிழலை தொட்டேன், என்னை மறந்தேன்
உன் கரம் பிடிதேன், எல்லாம் அடைந்தேன்.
நீ நேசிக்கிறாய்...நான் யோசிக்கிறேன்...
நீ நேசிக்கிறாய்...நான் யோசிக்கிறேன்...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்...
எல்லாம் சமாதியில் அடக்கம்...
ஒன்றுக்குமே உயிர் இல்லை...
என்னை நேசிப்பதை விட்டுவிட்டு...
என்னைப் போல் யோசி...
உணர்வுகள் இருந்தால் நீ சிந்திப்பாய்...
உண்மையான வாழ்க்கையை நீ சந்திப்பாய்...
இல்லையேல் சமாதியில் அடக்கமான - உன்
கவிதைகளை போலவே உன் வாழ்க்கையும்
அர்த்தம் அற்றதாகிவிடும்...
நட்பில் தாய்மை...
என் மரணத்தினால் மறக்கப் படுவதுநான் தான்...
நீயும் உன் நினைவுகளும் என் கல்லறையில்...
என்னைத் தாலாட்டும்..!
உன் கருவறை குழந்தையை - நீ
உறங்க வைப்பதைப் போலே...
அப்பொழுது என் நினைவுகள்...கல்லறை அல்ல...
உன் மடி மீது உன் அரவணைப்பில்... நான்
இதமாய் உறங்குகிறேன் அம்மா..
என்ன ஒரு கஷ்டம் கண் திறந்து
உனை கான முடியாதடி...
நினைவுகளாலே என்னை நான் இறந்தும்
வாழ்ந்து பார்க்கின்றேன்...
நீ காட்டிய அன்பில் உன்னை விட்டுச் செல்ல
எனக்கு துனிவில்லையடா...
இது ஒரு காதல்...
காலை விடிவதே உனக்காக...
உன்னை பார்ப்பதற்காக தான் பொழுதே விடிகிறதே...
அந்தி மாலை வருவதோ எனக்காக...
உன்னை பிரிந்து நான் படும் துயர்
அதில் ஒரு இனிமை...
இரவினில் ஏதடி தூக்கம்...
தூக்கம் தொலைந்து பல நாட்களாகியதே...
பெண்னே உன்னை கண்ட நாள் முதலாய்...!
சாலையோரம் யார் நடந்தாலும்...
உந்தன் நினைவுகளே...
ஒரு பெயரைக் கூட என் செவிகள் உணரவில்லை...
உன் பெயர் எனக்கு உயிர் மூச்சானதே...
நிரந்தரமான விடியலுக்காய் காதிருப்பேன்...
விடை தருவாய பெண்னே...
ஒரு லட்சம் பார்வைகள் பார்த்துவிட்டாய்...
இதயத்தில் உன் நினைப்பை ஊற்றிவிட்டாய்....
கண்களில் மொழியை புரியவைத்தாய்...
காதலின் நிலையை அறிய வைத்தாய்...
உயிர் வாடுதே நீ இல்லாமலே...
மனம் சென்றதே என்னிடம் சொல்லாமலே...
நீ உன்னை அறிவாய...?
நான் என்னை மறந்தேனே....
இது எனக்கு மட்டுமா...?
இல்லைஉனக்கும் சொந்தமா...?
ஒரே ஒரு வார்தையில் விடை தருவாய பெண்னே...
பெண்னே..
சிந்தித்துப் பார் - உன்னைக் கண்ட பின்
அவன் முகத்தில் சிந்திடும் சிரிப்பை...
யோசித்துப் பார் - உனக்காகவே ஏங்கிடும்
அவன் மனதை....
நினைத்துப் பார் -
உன்னிடத்தில் அவன் பேசிய வார்த்தைகளை...
உருகிப் பார் - உனக்காக அவன்
உருகிய நொடிகளை நினைத்து...
பெண்னே.....நீ சிந்தித்தாயா???
யோசித்தாயா???
நினைத்தாயா???
உருகினாயா???
ஆம் என்று நீ கூறியிருந்தால்
அவன் வாழ்க்கை அர்த்தப் படும்...
உனக்காகவே.....
என்னை மறந்து காலம் முழுதும் இருந்திடுவேன்
உன்னை நினைக்காமல் ஒரு நொடியேனும்
இருந்திட மாடேன்...
வாழ்வில் ஏதும் நிரந்தரமில்லையே...
இதை அறியாதவர் இங்கு யாரும் இல்லையே....
வாழ்வின் இறுதி வரை உனக்கென வாழலாம்...
ஏனெனில்...இந்த உலகம் எனக்கு அர்த்தப் பட்டது
நீ என் வாழ்வில் புகுந்ததால் பெண்னே...
என் உள் வந்த உன்னை வெளியிட மாடேன்...
எதிர் பார்க்கும் கல்லறை...
என்னிரு விழிதனில் நித்தமும் காட்சியளிக்கும்
உன் பொன் முகத்தை இனி எப்போதடி கான்பேன்......
கடல் கடந்து நீ இருந்தாலும்
என் மன அலைகளில் உன் நினைவுகளே
அடித்துக் கொண்டிருக்கின்றது.......!
காரணம் அன்று கனவில் கூட நான் காணவில்லை...
இன்று என் நினைவெல்லாம் நீயே இருப்பாய் என.....!
அன்பே என் ஸ்வாசத் தொழிற்ச்சாலை இயங்கும் வரையும்
உன் நினைவுகளையே காற்றாய் ஸ்வாசிக்கிறேன்...
நான் மடிந்தாலும் கூட என் கல்லறை
நித்தமும் உனை எண்ணி உன் வரவை எதிர்பார்க்கும்......!
என் அன்பே...
என் அன்பே...நான் உன்னை மறந்து போயிருப்பேன்...
அன்று நான் இறந்து போயிருப்பேன்...!
உன்னுடன் நான் பேச மறந்திருப்பேன்...
அன்று என் மூச்சு துறத்திருப்பேன்...!
உன் கண்களை கடந்து நான் சென்றிருப்பேன்...
அன்று என் கண்கள் மூடிக்கிடந்திருப்பேன்...!
உன்னுடன் நான் வாழ நினைத்திருப்பேன்...
அன்று என் வாழ்க்கை முடித்திருப்பேன்,,,!
நீ என்னோடு இல்லை....
நானும் நீயும்......
மண்னைத்தொட அந்த மழை படும் பாடு...
இன்று நான் உன்னைத் தொட்ட அந்த வேளை...
மழை மண்னைத் தொட்ட சந்தோஷம் எனக்கு....
நிறம் இல்லாத ஓவியங்கள்...
கலை இல்லாத சிற்ப்பங்கள்...
அர்த்தம் புரியாத கவிகள்...
உயிர் பெற்றனவோ உன் வருகையால்....?
காகிதத்தில் ஓடம் விட்டவன்.. - இன்று
காகிதத்தில் காதல் கடிதம் எழுதுகிறான்...
கற்றுத்தந்தவள் யாரோ???? - பெண்னே
நீ கடைக்கண்ணால் பார்ப்பதேனோ????
உன் சகல அசைவுகளையும் நான் அறிவேன்...
உன் ஒன்றில் மட்டும் நான் அசைந்துவிடுகிறேன்...
உன் அசைவே இல்லாத ஆயிரம் கதை பேசும்
அந்த மெளனத்தில் தானடி....
மழை மண்னைத்தொடுவதால் ஆனந்தம்...
நான் உன்னை அடைவதே பேரின்பம்...
எனது காதல்....
தொலைந்து போன வாழ்விற்குள்
இன்றும் தொலையாமல் பத்திரமாய் எனக்குள்
உனது நினைவு கோலங்கள் மட்டுமே.....!
சட்டைப் பையில் ஒட்டிக்கொண்ட கறையைப் போல
இதயத்தாள்கலில் கிழிக்கப் படாத பக்கங்களாய்...
சிதையாத கவித்துளிகளாய்...
உனது ஞாபகங்கள் கன்னத்தில் வழிந்தோடி
காய்ந்து போகின்றதே......!
என் கலைந்து போன கனவுகளைப் போல
காயங்களால் மட்டுமல்ல
கண்ணீராலும் வாழ்கிறதே என் காதல்.....!
என் சுகம் நீயடி......
உன் நிழலைக் கூட தொடும் சிறு
துரும்பும் என் எதிரி தானடி...
உன் உடலில் வீசும் அந்த சுகந்த வாசம் என்
உணவு தானடி...
என் அன்பும் நீயடி..என் ஸ்வாசம் நீயடி...
என் உயிரும் நீயடி..என் உறவும் நீயடி...
நான் ஸ்வாசிக்கும் காற்றினில் கரைந்து செல்லடி...
கலந்து கொல்லடி... நீ
எனக்குள் வந்து கலந்து கொல்லடி...
என் மனதில் பாயும் மின்சாரம்..
என்னைத் தட்டி எழுப்புதே,
என்னை திட்டி அழைக்குதே,
உன்னை நினைக்காத நிமிடம்.....
தூரம் நின்று உன்னை ரசிப்பேன்...
கண்கள் பட விடமாடேன்...
பூக்கள் என்று உன்னை பறிப்பேன்..
வாடிவிட விடமாடேன்...
ஒரு நிமிடம் எனக்காக வாழ்க்கையை யோசிப்பேன்
உனக்காக கண்களை மூடிக்கொண்டு வீழ்த்திடுவேன்..
உனக்காகத்தானே...
இருக்கும் இதயமோ ஒன்று...
அது கூட உனதல்லவா....
இருக்கும் விழிகளோ இரண்டு...
என் பார்வையில் உன் விம்பம் அல்லவா...?
இருக்கும் கைகளோ இரண்டு..
உன்னை அனைத்திட தானே துடிக்கின்றன...
இருக்கும் கால்களோ இரண்டு...
உன் திசை அறிந்து நடக்கத்தானே...
இருக்கும் உயிரோ ஒன்று..
அது கூட உன்னையே ஸ்வாசிக்கின்றதடி...
என்னை முழுவதும் இழந்தேனடி..
உன்னில் என்னை தொலைத்தேனடி...
அடியோடு சாய்த்தவளே....
முழு நேர நிலவாய்...
என் வாழ்நாள் கழிகிறது....
நிலவே நீ பெளர்னமியாவது எப்போது...?
கரைந்தேன் காதல் கடலில்... - என்
கல்லறை வரை கட்டிடுவேன்...
நம் காதல் மாளிகை...
கல்லறை கூட...நம் கதை சொல்லும்
என்றோ ஒரு நாள்...
அசைந்துகொண்டிருந்த என் வாழ்வை...
அசையா சொத்தாய் நிலை நிறுத்தி..
எனை அடியோடு சாய்த்தாயடி...
உன் மடியினில்....உறங்கிடுவேன்
காலம் கரையும் வரையில்...
உண்ர்ந்தேன்...
உண்ர்ந்தேன்...உன் பிரிவின் வேதனையை...!
அன்பே ஒரு காற்றின் வேகத்தில் எனக்கு தெரியவில்லை....
உன் வர்த்தைகள் எனக்கு சொந்தமில்லை என்று.......!
ஒரு மழை நாளில் நானும் நீயும் நனைந்து போது......
எனக்கு புரியவில்லை...
என் கண்கள் கார்மேகம் ஆகும் என்று....!
நட்சத்திரங்களை என் தோழில் சாய்ந்ந்து
நீ ரசித்த போது.....நான் நினைத்திட வில்லை......
இருவரும் சிதறிப்போவோம் என்று..!
எல்லாம் இழந்தேன்.....அப்போது தான்
உண்ர்ந்தேன்...உன் பிரிவின் வேதனையை...!
நான் உன்னை காதலிக்கிறேன்...
நான் உன்னை காதலிக்கிறேன்...
நான் ஸ்வாசிக்கும் போது உணர்ந்தேன்
உன் பெண்மையின் வாசனை...
நான் உன்னை காதலிக்கிறேன்...!
என் நினைவுகளை உன்னிடமே விற்றுவிட்டேன்...
நான் உன்னை காதலிக்கிறேன்...!
என் காகித விருப்பங்கள் - உன்னால்
இன்று புத்தக விருப்பங்களாகியது..
நான் உன்னை காதலிக்கிறேன்...!
நீ என்னிடம் இருக்கும் வரை
எதுவும் தெரியவில்லை
என்னை விட்டுச்சென்றாய்
என்னையே தெரியவில்லை..
நான் உன்னை காதலிக்கிறேன்..!
நீ நடந்திடும் பாதை என் விரல்காட்டியில் தான்...
உன் நிழல் கூட என் பார்வையில் தான்...
நான் உன்னை காதலிக்கிறேன்...!
காலை எழுந்ததும் உன்னை நினைக்கா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
நான் உன்னை காதலிக்கிறேன்...!
நீ துடிக்கின்ற நிமிடம் என் இதயம்
சொல்லாமலே உணரும்...
நான் உன்னை காதலிக்கிறேன்...!
இப்படியெல்லாம் கூறித்தான் என் காதலை
உனக்கு புரியவைக்க வேண்டிய
அவசியம் இல்லை பெண்னே...
ஏனெனில் நான் துடிக்கும் அத்தனை
துடிப்பையும் உன்னுள்ளும் கண்டுகொண்டேன்...
கலையாத கனவுகள்....!
உறங்கும் போது கனவுகளையே
போர்வையாய்போர்த்துக்கொள்கிறேன்....
விரைவான கனவுகளுக்காய் விடியாத இரவுகளில்...
நான் சென்றுகொண்டிருக்கிறேன்...
அன்று நாம் கை கோர்த்திட்டோம்...
இன்று நாம் உயிரோடு கலந்திட்டோம்...
உறக்கம் வருவதில்லை..தவறி வந்தாலும்
உன் நினைவுகள் என்னைஉறங்க விடுவதில்லை...
அசந்து கிடக்கும் நேரம் என்
பின்புறமாக ஒரு குரல்...
திடுக்கிட்டு எழுந்திடும் போது தான் தெரிந்தது
என் நினைவுகளில் நீ
ஆட்ச்சி செய்துகொண்டிருக்கிறாய் என...
நேரில் கானும் சோகங்கள்
கனவில் வருவதில்லையே...
கனவே என் இரவை விட்டு பிரியாதிரு...
யாருக்கு யார் அழகு?
அந்த நிலவு ஒரு அழகு..
அந்த வானம் ஒரு அழகு..
இரவில் மின்னும் நட்ச்சத்திரங்கள் கூட அழகு..
வெயிலுக்கு மழை அழகு...
அந்த மழை மன்னை தொடுவதும் அழகு..
கண்னைக் கவரும் கடல் அழகு..
கடல் அலைகளில் மனதின் இனிமை ஒரு அழகு...
சோகத்தில் சந்தோஷம் அழகோ அழகு...
இவையெல்லாம் தான் அழகு என்று நினைத்தேன்...
என்னவளே அன்று உன்னை கானவில்லையடி...
உன்னைக் கண்டபின் தான் உணர்ந்தேன்...
அழகின் அர்த்தமே நீ தான் என...
உயிர் முச்சு...
இமைகளே சற்று ஒதுங்கிவிடுங்கள்...
கண்கள் மட்டுமே மோதட்டும்....
இதயமே நீ தைரியமாயிரு...
கண்கள் மோதினாலும் காயப்படப்போவது நீதான்..
காதலியை உணர்ந்தேன்காதலின் வருகையில்...
காதலை உணர்ந்தேன்காதலியின் வருகையில்...
காதல் வெறும் வார்த்தை அல்ல உடனே மறைவதற்கு...
காதல் என் உயிர் முச்சு...
காதலுக்காகவே மூச்சு விடுவேன் முச்சயும் விடுவேன்..!
ஷங்கரின் காதல்...
மூடி வைத்தும் மறைவதில்லை காதல்..
மறைத்தாலும் மூடி வைத்துவிடவே முடியாதது காதல்..
உயிர்பிரியும் வலியை உன் பிரிவில் உணர்த்தியது காதல்...
என் கண்கள் சிந்தும் துளியில் உன் தாகம் கண்டேன் காதல்...
உன்னை நினைக்காத நாள் இல்லை
உன்னை விட்டு நான் இல்லை...
என்றோ ஒரு நாள் காற்றோடு.....
உன் காதில் கவிதை சொல்லும் என் காதல்...